My Blog List

Monday, April 4, 2016

மாதவிடாய் வயிற்று வலிக்கு - இயற்கை வைத்தியம்

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்.


இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.


வழக்கமாக உடற்பயிற்சி செய்யுங்கள் :உடற்பயிற்சியினால் ஏற்படும் பல ஆரோக்கிய நன்மைகளில் சுறுசுறுப்பான செயலில்இருப்பது மற்றும்தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மாதவிடாயின் போது வலிகுறைப்பதில் ஒருமுக்கிய பங்கை வகிக்கிறது. நீங்கள் உடற்பயிற்சி  அல்லதுகடுமையானபயிற்சிகள் செய்ய வேண்டியது இல்லை, யோகா அல்லது பிலேட்ஸ்மற்றும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல்போன்ற எளியபயிற்சிகள்   மாதவிடாய் வலியைக்கையாள்வதில்மிகவும்பயனுள்ளதாக இருக்கும்.


சூடானஅழுத்தத்திற்குமுயற்சி செய்யுங்கள்நீங்கள் வீட்டிலிருந்து கடுமையான வலியை உணர்ந்தால், ஒரு சூடான நீர் பாட்டில்(ஒரு பாட்டில், சூடான நீர் கொண்டு முன்னுரிமை ஒரு எஃகு பாட்டில் நிரப்பப்பட்ட).அல்லதுசூடானதிண்டு வையுங்கள். இந்த அடிவயிற்றின் தசைகள் ஓய்வெடுக்க உதவுகிறது மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள் (மிகவும் சூடான தண்ணீர் கட்டு பயன்படுத்த வேண்டாம்).


ஒரு சூடானகுளியல் அல்லது மழைப்பொழிவை எடுத்துக் கொள்ளவும்:  நீங்கள் தீவிர வலியுடன் சோர்வாக உணர்ந்தால், ஒரு அது ஒரு குளியல் அல்லது தூவாலைக் குளியல் எடுத்துக் கொள்வது நல்லது. அது உங்கள் வலிக்கு நிவாரணம் அளிப்பதுடன் உங்கள் மனது மற்றும் உடலுக்கு ஓய்வும் அளிக்கிறது.


மசாஜ்


மாதவிடாய் வலியை குறைக்க மற்றொரு விரைவான வழி அடி வயிற்று பகுதியில் மசாஜ் மூலம். நீங்கள் செய்ய் வேண்டியதெல்லாம், உங்கள் விரல்களால் மெல்லிய வட்ட இயக்கங்களில் உங்கள் அடிவயிற்றை மசாஜ் செய்வது தான். சிறிது சூடான எண்ணையை அது விளைவின் தீவிரத்தை அதிகப் படுத்துவதால், தடவலாம்.


ஓட்ஸ்


மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஓட்ஸ் சிறந்த நிவாரணியாக இருக்கும். ஏனென்றால், அதில் வலியைப் போக்கும் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது.


மீன் :


மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு தீர்வே கிடையாது. இதற்கு, சூறை மற்றும் சால்மன் போன்ற மீன் வகைகளை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 உடல் தசைகளை வலுப்படுத்துவதுடன் வயிற்று வலியை கட்டுப்படுத்தும்.


கசகசா :


கசகசாவை மாதவிடாய் காலத்துக்கு முன் ஒருவாரம் பாலில் அரைத்துக் கலந்து குடித்துவர, கை, கால், இடுப்பு, உடல் சோர்வு ஆகிய அனைத்தும் நீங்கிவிடும்.


தண்ணீர் :


மாதவிடாய் காலத்தில் உடலில் உள்ள நீர் சத்து முழுவதுமாக குறைந்துவிடும். இது போன்ற சமயங்களில் குறைந்தது 8-10 டம்பளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்துக் குடித்தால் மேலும் தெம்பு கிடைக்கும்.


சாக்லேட் :


ஊட்டச்சத்து குறையும் மாதவிடாய் காலத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ள கருப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள செரோடொனின் மனநிலையை சீராக்கி வயிற்று வலியை குறைக்கும்.


பாட்டி வைத்தியம் 


வெற்றிலை – 2

சாம்பார் வெங்காயம் – 2

சீரகம் – 1 ஸ்பூன்

பூண்டுபல் – 2


இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.


வெள்ளைப் பூசணி – 100 கிராம்

வெள்ளரி விதை – 10 கிராம்

சாம்பார் வெங்காயம் – 2

வெள்ளை மிளகு – 5 கிராம்

பூண்டு – 2 பல்

பனங்கற்கண்டு – 100 கிராம்


இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.


மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.


உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள்


முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.


மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.


ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்.


மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.


இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு. இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.



மாதவிடாய் வயிற்று வலிக்கு - இயற்கை வைத்தியம்